குற்றம் சாட்டப்பட்ட 79 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10 பிரம்படி!
- Muthu Kumar
- 17 Mar, 2026
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊனமுற்ற குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 79 வயது வெளிநாட்டவருக்கு லஹாட் டத்துவில் உள்ள ஒரு அமர்வு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் விதித்தது.
இந்தோனேசியரான சம்பந்தப்பட்டவர் மீது, 2024 ஆம் ஆண்டு சபாவின் லஹாட் டத்துவில் உள்ள ஒரு வீட்டில் 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர் சிறைவாசம் முழுவதும் ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.குற்றம் சாட்டப்பட்டவரை குடிநுழைவுத் துறைக்கு அனுப்பவும், தண்டனை முடிந்ததும் நாடு கடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



