மஸ்ஜிட் இந்தியாவில் மாயமான மாது... அந்த மாதுவின் உடல் சிதைந்திருக்கலாம்....

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26: கோலாம்பூர், ஜலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில், மண் உள்வாங்கி மாயமான இந்திய மாதுவைத் தேடும் பணியை நிறுத்துமறு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்த அந்த மாதுவைத் தேடும் பணியை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சாக்கடை கால்வாய்கள் அதிக வேகத்தில் பாய்வதைக் கருத்தில் கொண்டு அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் கருத வேண்டும் என்று கழிவுநீர் பொறியாளர் ஜி பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள பெரிய, 1.5 மீ அகலமுள்ள கழிவுநீர் பாதைகள் க பல பிரிவுகளின் வழியாக உடலைக் கொண்டு சென்றிருக்கலாம் என்று அவர் விளக்கினார்.

இந்தக் கழிவுநீர் பாதைகள் ஒரு வினாடிக்கு குறைந்தபட்ச ஓட்ட வேகம் 1மீ. கோட்பாட்டளவில், உடல் 24 மணி நேரத்திற்குள் 86.4 கிமீ வரை பயணித்திருக்கலாம் என்று அவர் எஃப்எம்டி ஊடகத்திற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.

எனவே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 2-ல் முடிவடையும் இடத்தில் தேடும் பணியை மேற்கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய நீர் மற்றும் கழிவு நீர் தர பாதுகாப்பு சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றும் பரமேஸ்வரன், கடுமையான சாக்கடை சூழலில் உடல் வேகமாகச் சிதைந்திருக்கலாம் என்றும் எச்சரித்தார்.

வலுவான நீரோட்டங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்பில் ஏராளமான சந்திப்புகள் இருப்பதால், உடல் உறுப்புகள் வெவ்வேறு திசைகளில் பாய்வதால், உடல் துண்டிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்றார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *