முதலை தாக்கிய ஆடவரின் சடலம் 4 நாள்களுக்குப் பிறகு மீட்பு!

top-news
FREE WEBSITE AD


 

கினாபத்தாங்கான், ஜூலை 19: நான்கு நாட்களுக்கு முன் முதலை தாக்கியதாக கூறப்பட்ட ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

 

கடந்த செவ்வாயன்று 35 வயது கமி அன்டோங் என்ர அவ்வாடவர்,  தனது 10 வயது மகனுடன் மீன் பிடிக்கும் போது, Kampung Soba பெர்பாடுவானில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

 

இச்சம்பவத்தில் காமி காணாமல் போன நிலையில்,  அவரது மகன் தப்பிச் சென்றார்.

 

இதனை அடுத்து, இன்று காலை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஊழியர்கள், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில், 10.15 மணியளவில் உயிரிழந்தவரின் உடலைக் கண்டெடுத்தனர்.

 

பாதிக்கப்பட்டவரின் உடல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *