பத்து லேயர் கடலில் மூழ்கிய இன்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது!

top-news
FREE WEBSITE AD


கோத்தா திங்கி, ஜூலை 22: பத்து லேயர் கடலில் ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7.45 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து தோராயமாக 1 கிமீ தொலைவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது, என்று இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சடலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து லேயர் கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது

மற்றொருவர் உடல் காணாமல் போன இடத்திலிருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ள கடற்கரையில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *