எனது கோரிக்கையை பாஸ் பயன்படுத்துகிறது! - ரஃபிஸி

- Shan Siva
- 16 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 16 : நீதித்துறை நியமனங்கள் குறித்து அரச விசாரணை ஆணையம் (RCI) அமைக்க வேண்டும் என்ற தனது அழைப்பை பாஸ் பயன்படுத்திக் கொண்டதாக பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு
வாரத்திற்குள் பாஸ் கட்சி இந்த விவகாரத்தில் தலையிடுவது நீதித்துறை சுதந்திரத்தை
ஆதரிப்பதில் அதன் நேர்மையின்மையைக் காட்டுகிறது என்று ரஃபிஸி கூறினார்.
நீதித்துறை
சுதந்திரம் என்ற பிரச்சினை, அவர்களின்
அரசியல் சார்பைப் பொருட்படுத்தாமல், அனைவரும் முன்னிலைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்சினை, என்று ரஃபிஸி பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில்
கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *