மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் கால்வாயில் தவறி விழுந்து மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 26:  நேற்று ஜொகூர், தெப்ராவில்  மீன்பிடிக்கச் சென்ற  10 வயது சிறுவன் கால்வாய்க்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

இச்சம்பவம் குறித்து  நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அழைப்பு வந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி முகமட் ரஷீத் சுலைமான்  கூறினார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர்,  வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 10 மீட்டர் தொலைவில் அச்சிறுவனை கண்டெடுத்தனர்.

 சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்காக சிறுவனின் சடலம் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் முகமட் ரஷீத் சுலைமான் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *