தேவாலயத்திற்குள் புகுந்த கார்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 2:  பெட்டாலிங் ஜெயா தூய இக்னேசியஸ் தேவாலயத்திற்குள் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து  நுழைந்ததில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், தேவாலயத்தின் கதவுகள், இருக்கைகள் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லவேளையாக  உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என்றும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு எவ்வித காயமும் இல்லை என்றும் தேவாலயத்தின் பாதிரியார் லாரண்ஸ் ங் கூறினார். 

அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

இதனை அடுத்து வாகன ஓட்டுநர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளதோடு, அவரை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும்படி காவல்துறை உத்தரவிட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *