கார் ஆற்றில் கவிழ்ந்தது 40 வயது பெண் மரணம்!

top-news
FREE WEBSITE AD

பினாங்கின் கப்பாலா பத்தாஸில் உள்ள ஜலான் லஹர் கெபார் பெனாகா அருகே இன்று காலை  கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் அதனை ஓட்டிச் சென்ற 40 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக தங்களின் செயல்பாட்டு மையத்திற்கு காலை 7.39 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

கோலா முடா மற்றும் பட்டர்வொர்த் தீயணைப்பு நிலையங்களில் இருந்து மீட்புப் பணியாளர்கள் அனுப்பப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தனர்.

பாதிக்கப்பட்ட சித்தி ஹவா இசா என்ற  40 வயது பெண் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததாக அப்பேச்சாளர் கூறினார்.

காலை 9.55 மணியளவில் அவரது உடல் அகற்றப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக எ அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *