காருக்குள் இரண்டு பெண்களின் சடலம்! புக்கிட் மெர்தாஜாமில் கண்டெடுப்பு!

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜாம், ஜூலை 11: புக்கிட் மெர்தாஜாம் தாமான் ஸ்ரீ ரம்பையில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் இரண்டு பெண்களின் சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

மாலை 5.30 மணியளவில் ஒரு வழிப்போக்கர் காரைக் கவனித்து, உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.

காரின் கதவுகளைத் திறப்பதில் உதவிக்காக அழைப்பு வந்ததை அடுத்து, பெர்டா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்தி காரை வெற்றிகரமாகத் திறந்ததாகவும்,   உள்ளே, முன் இருக்கைகளில் இரண்டு பெண்களின் உடல்களைக் கண்டதாகவும் அவர் கூறினார். தற்போது இது தொடர்பான போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *