2025-ல் டேட்டா சென்டர் தொழில்துறை வலுவாகும்! - தியோ நீ சிங்

- Shan Siva
- 08 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 8: மலேசியாவின் டேட்டா சென்டர் தொழில்துறை 2025 ஆம் ஆண்டுக்குள் RM3.6 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும்
வளர்ச்சிக்கு உள்ளூர் தொழில் நிறுவனங்களைத் தயார்படுத்துவது முன்னெப்போதையும் விட
முக்கியமானது என்று தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்துள்ளார்.
'கிளவுட்டெக் & டேட்டா சென்டர் 2024' மாநாட்டில் பேசிய அவர், இது தொழில்துறையின்
வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று அவர் கூறினார்.
2021 முதல் மார்ச் 2024 வரை மலேசிய
முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் RM76 பில்லியன் மதிப்புள்ள தரவு மையம் தொடர்பான முதலீடுகள், முதலீடு - வர்த்தகம்
மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதிலிருந்து, அதிகமான தொழில்துறை ஜாம்பவான்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதை நாங்கள் காண்கிறோம். மேலும் தற்போதுள்ள பல தரவு மைய ஆபரேட்டர்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறார்கள் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *