கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள உருகுவே நாட்டு வீரரின் மரணம்!

top-news
FREE WEBSITE AD

உருகுவே நாட்டை சேர்ந்த 27 வயதான கால்பந்தாட்ட வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ, கால்பந்து விளையாட்டின் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென நிலைகுலைந்து உயிரிழந்த  செய்தி கால்பந்து உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி இதேபோல் விளையாட்டின் போது சரிந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் களம் கண்டார். ஆனால், மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்து, இம்முறை அவர் உயிரிழந்துள்ளார் என்பது மிகவும் வேதனையான செய்தியாக பார்க்கப்படுகிறது.

இளம் வயதிலேயே இவ்வாறு ஒரு திறமையான வீரரை இழந்தது கால்பந்து உலகுக்கு பேரிழப்பு. ஜுவான் இஸ்குவேர்டோவின் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றோம். இந்த சம்பவம், விளையாட்டு வீரர்களின் உடல்நலனைப் பற்றி நம்மில் பலருக்கும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *