வாக்களிக்க வந்த ‘PANG’ இரட்டையர்! இன்ப அதிர்ச்சி அடைந்த இன்னொரு இரட்டையர் ஜோடி!

top-news
FREE WEBSITE AD

கோலகுபு பாரு இடைத்தேர்தலில் தங்கள் குடிமைக் கடமையை நிறைவேற்றுவதற்காக  ஒரே மாதிரியான இரட்டையர்களான சான் ஷெர் எர் மற்றும் ஷெர்னி ஆகியோர் வாக்களிக்க வந்தனர்.

  25 வயதான இந்த ஜோடி SJKC கிங் மிங்கில் உள்ள வாக்குச் சாவடி மையத்தை காலை 8 மணிக்குத் திறப்பதற்கு முன்பே வந்து சேர்ந்தனர்.

அதே வேளை, பாங் சாக் தாவோவுக்கும் சாக் யிங் என்ற இரட்டை சகோதரி இருப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். பாங் அவரது சகோதரியுடன் வாக்களிக்க வந்திருந்தார்.

 போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரும் எங்களைப் போலவே இரட்டையர் என்பது  ஆச்சரியமாக இருந்தது," என்று எஃப்எம்டி அணுகியபோது, ​​இரட்டையர்களில் மூத்தவரான ஷெர்னி கூறினார்.

 இதற்கிடையில், சாக் தாவோ வாக்குச் சாவடி மையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சாக் யிங் தனக்கு பிரச்சாரத்தில் உதவியதாகத் தெரிவித்தார்!

(படம்: FMT - நன்றி )

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *