டிரெய்லர் மோதி யானை பரிதாபமாக பலி!

top-news
FREE WEBSITE AD

குளுவாங், செப் 6: குளுவாங், கம்போங் காஜாவில் சாலையைக் கடந்த ஆண் யானை ஒன்று நேற்றிரவு டிரெய்லர் லாரியில் மோதி உயிரிழந்தது.

இரவு 10.45 மணியளவில் நடந்த இந்த விபத்தில் டிரெய்லர் ஓட்டுநர் காயமடையவில்லை என்று மாவட்ட காவல்துறைத் தலைமை உதவி ஆணையர் பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், டிரெய்லர் மெர்சிங்கில் இருந்து கஹாங் தைமூர் நோக்கிப் பயணித்து கொண்டிருந்த போது யானை திடீரென சாலையைக் கடந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

யானை பலத்த காயம் அடைந்து விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *