காஜாங்கில் பரபரப்பு... துப்பாக்கி முனையில் நகைகளைக் கொள்ளையிட்ட கும்பல்!

top-news
FREE WEBSITE AD

காஜாங், ஜூன் 18: காஜாங்கில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

 நேற்று மாலை 3.17 மணியளவில் காஜாங்கில் உள்ள மெட்ரோ பிளாசாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதுகாவலர் உடை மற்றும்  முகமூடியுடன் அந்தப் பேரங்காடிக்குள் நுழைந்த கும்பல் நகைக்கடையில் மேல் நோக்கிச் சுட்டது. இதனை அடுத்து  நகைக் கடை ஊழியர்களும் பொதுமக்களும் அவ்விடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

உடனே அக்கும்பல் நகைகள் இருந்த கண்ணாடிகளை அடித்து உடைத்து நகைகளுடன்  காரில் தப்பினர். இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை. இழப்புகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *