20 வயது இளம்பெண்ணை பாலுறவுக்கு அழைத்த சமையல்காரர்! RM 6,500 அபராதம் விதித்த நீதிமன்றம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 25: பினாங்கில் உள்ள ஒரு சமையல்காரர், 20 வயது பெண்ணை தன்னுடன் பாலுறவு கொள்ள அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதால், பாலிக் புலாவ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் அவருக்கு RM6,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மாஜிஸ்திரேட் Chia Huey Ting முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, 30 வயதான அமிருல்ஹக்கீம் சுஹைமி குற்றத்தை ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் 10 மாத சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பாயன் லெபாஸில் உள்ள வணிக சதுக்கத்தில் உள்ள ஒரு கடையில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அமிருல்ஹக்கீம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *