முதன்முறையாக யு எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பைனலில் நுழைந்தார் பிரிட்ஸ்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.  ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், 25வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜாக் டிராப்பர் மோதினர். மூன்று மணி நேரம் 3 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சின்னர் 7-5, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் தியாபோ மோதினர். முதல் செட்டை 4-6 என இழந்த பிரிட்ஸ், இரண்டாவது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். மூன்றாவது செட்டை 6-4 என வென்ற தியாபோ, 4வது செட்டை 4-6 எனக் கோட்டைவிட்டார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் மீண்டும் அசத்திய பிரிட்ஸ் 6-1 என தன்வசப்படுத்தினார்.

மூன்று மணி நேரம் 18 நிமிடம் நீடித்த போட்டியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் சின்னர், பிரிட்ஸ் மோதுகின்றனர். ஏ.டி.பி., ஒற்றையரில் இருவரும் மோதிய 2 போட்டியில், தலா ஒரு வெற்றி பெற்றனர். கடைசியாக, கடந்த ஆண்டு இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இவர்கள் மோதிய போட்டியில் சின்னர் வெற்றி பெற்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *