ஆற்றில் மூழ்கி சிறுமி மரணம்!

top-news
FREE WEBSITE AD


குவா மூசாங், ஜூன் 15: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பூர்வக்குடி சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கம்போங் குவாலா பெதிஸ் அருகே உள்ள சுங்கை நெங்கிரியில் நேற்று குளித்துவிட்டு காணாமல் போன 7 வயது ஓராங் அஸ்லி சிறுமி, இன்று சடலமாக மீட்கப்பட்டாள்.

சியாமிலி நூர் அலே கர்னி  ஷாமி என்ற அச்சிறுமியின் உடல், நண்பகலில் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூ தெரிவித்தார்.

கிராமவாசிகளின் உதவியுடன், SAR குழு  அச்சிறுமி காணாமல் போனதாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து 1.8 கிமீ தொலைவில் உடலைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]