கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு தயார்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD


புத்ராஜெயா, ஜூலை 12: தற்போதுள்ள ஓட்டைகளை அடைப்பதற்காக கடசித் தாவல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

 எதிர்க்கட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய விரும்பினால், தாங்கள் அதைப் பற்றி விவாதிக்கத் தயார் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார். அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை என்று இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்  கூறினார்.

 கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படி  ​​கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எவரும் எம்.பி. பதவியில் இருந்து தானாகவே தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியதாக அன்வார் மீண்டும் நினைவூட்டினார்.

இருப்பினும், அந்த நேரத்தில், பெர்சாத்து அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. எனவே  இதற்கு உடன்படவில்லை, ஏனெனில் அவர்கள் அம்னோவிலிருந்து உறுப்பினர்களைக் கொண்டு வந்தனர்," என்று அவர் கூறினார்.

கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 49A இல் உள்ள திருத்தங்கள்  பொதுவாக கட்சித் தாவல் சட்டம் என்று அழைக்கப்படுகிறது. அப்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிர்வாகத்திற்கும், எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான சீர்திருத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 2022 இல் இது நடைமுறைக்கு வந்தது.

பக்காத்தான் ஹராப்பான்  அரசாங்கத்திற்கு எதிராக பெர்சாத்து  தலைமையிலான கிளர்ச்சியில் பல பிகேஆர் எம்பிக்கள் இணைந்த பிறகு, அத்தகைய சட்டத்திற்கான உந்துதல் வேகம் பெற்றது என்று அன்வார் விளக்கினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *