பாதுகாப்பு படையினரின் நலன்களில் அரசு கவனம் செலுத்தும்! - அன்வர் உறுதி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 16: பாதுகாப்புப் படையினரின் நலன்களில் அரசு கவனம் செலுத்தும் என்றும், அவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதிலும் மடாணி அரசாங்கம் எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.

தனது அரசியல்  செயலாளர் அகமது ஃபர்ஹான் பவுஸி தனது சார்பாக பகாங் மாநிலத்தின் குவாந்தானில் உள்ள பெர்சேரா போலீஸ் நிலையத்திற்கு அண்மையில் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்ட பிரதமர்,  அந்தக் காவல் நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படி அவரைத் தாம் பணித்ததாக அவர் தெரிவித்தார்.

அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சிறைச்சாலைத் துறை கட்டிடங்களை நாடளாவிய நிலையில் பராமரிக்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் 15 கோடி வெள்ளி கூடுதலாக ஒதுக்கப்படும் என்று பிரதமர் கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

மேலும், மலேசிய இராணுவப் படையினரின் வீடுகளை புனரமைப்பது மற்றும் அரச மலேசிய போலீஸ் படை உள்பட உள்துறை அமைச்சின் கீழுள்ள தங்கும் விடுதிகளைச் சீரமைப்பது போன்ற பணிகளுக்காக 50 கோடி வெள்ளி ஒதுக்கீட்டை பிரதமர் கடந்த 2023 வரவு செலவுத் திட்டத்தின் போது அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]