சீன பிரதமர் நாடு திரும்பினார்!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜூன் 20: மலேசியாவுக்கான மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு சீனப் பிரதமர் லீ கியாங் இன்று (ஜூன் 20) நாடு திரும்பினார்.

கேப்டன் நூர் அஹ்மத் ஜைம் ஜஹாரி தலைமையிலான ராயல் ரேஞ்சர் ரெஜிமென்ட்டின் சிவப்புக்கம்பள மரியாதை வழங்கப்பட்டது.

லி மற்றும் அவரது குழுவை ஏற்றிக்கொண்டு ஏர் சீனா விமானம் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் (KLIA) புங்கா ராய வளாகத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டது.

மேலும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சீனாவுக்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முஹமட், நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துல் ஆகியோரும் வழியனுப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *