வீட்டு வசதி திட்டம் சமமாக உருவாகபப்ட்டு வருகிறது! - ஜாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 6: மாநிலத்தில் மலிவு விலை வீட்டு வசதி மேம்பாடு குறித்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ஜொகூரில் வீட்டு வசதித் திட்டங்கள் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் சமமாக உருவாக்கப்பட்டு வருவதாக பாரிசான் நேஷனல் தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காஸி தலைமையிலான மாநில அரசு, மிகவும் ஏழ்மையானவர்களுக்கு இலவச வீடுகளைக் கட்டுவதற்காக 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது என்றும் ஜாஹிட் கூறினார்.

ஜொகூரில் வீட்டு வசதி மேம்பாடு, நடுத்தர மற்றும் உயர் வருமான வகுப்பினரைக் குறிப்பிடும் வகையில், M40 மற்றும் T20 குழுக்களை மட்டும் மையமாகக் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.

மாநில அரசு மலிவு விலை வீட்டு வசதித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது என்று தங்காக் ஜெயாவில் சீன வாக்காளர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, துணைப் பிரதமராகவும் இருக்கும் ஜாஹிட் கூறினார்.

முன்னதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஜொகூரில் மலிவு விலை வீட்டு வசதி மேம்பாடுகள் மெதுவாக இருப்பதாக விமர்சித்திருந்தார். குறைந்த வருமானக் குழுக்களின் தேவைகளுக்கு மாநிலம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜொகூர் பாருவில் சொத்து விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதால், இளைஞர்களுக்கும் புதிதாக உருவான குடும்பங்களுக்கும் சொந்த வீடு வாங்குவது மிகவும் கடினமாகி வருவதாக அவர் கூறினார். மாநிலத்தின் நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலில் மேம்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *