நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் விமானம்! ஒருவர் பலி! 20 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD


லண்டனில் இருந்து சிங்கப்பூருக்குச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென்று குலுங்கி ஆட்டம் கண்டதால், பயணிகள் பீதியில் உறைந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் 20 பேர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சிங்கப்பூர் செல்லும் போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்குத் திருப்பிவிடப்பட்டு உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (08:45 GMT) தரையிறங்கியது.

 மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களை ஏற்றிச் சென்றதாக விமான நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் குடும்பத்தினருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு மருத்துவ உதவி வழங்க தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், கூடுதல் உதவி தேவைப்படுவதற்கு ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் விமான நிறுவனம் மேலும் கூறியது.

தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகால குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்று தெரிவித்தார். லண்டன் ஹீத்ரோவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321 இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்" என்று அவர் பேஸ்புக்கில் ஓர் அறிக்கையில் பதிவிட்டுள்ளார்!

 

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *