7 சட்டங்களுக்கு மாமன்னர் ஒப்புதல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 4: கடந்த ஆண்டு அக்டோபர் 14 முதல் டிசம்பர் 12 வரை நடைபெற்ற 15வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் மூன்றாவது கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏழு சட்டங்களுக்கு மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளார்.

 இன்று மக்களவையில் அமைச்சர்கள் கேள்வி நேர அமர்வு தொடங்குவதற்கு முன்பு மக்களவை சபாநாயகர் டான் ஸ்ரீ ஜொஹாரி அப்துல் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வழங்கல் சட்டம் 2025 (பட்ஜெட் 2025), நிதிச் சட்டம் 2024, வரி வசூல், நிர்வாகம் மற்றும் அமலாக்கத்திற்கான நடவடிக்கைகள் சட்டம் 2024 மற்றும் லாபுவான் வணிக நடவடிக்கை வரி (திருத்தம்) (எண்.2) சட்டம் 2024 ஆகிய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகஅவர் கூறினார்.

தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (திருத்தம்) சட்டம் 2024, தொடர்பு மற்றும் மல்டிமீடியா (திருத்தம்) சட்டம் 2024 மற்றும் நீர் சேவைகள் தொழில் (திருத்தம்) சட்டம் 2024 ஆகியவை நிறைவேற்றப்பட்ட பிற சட்டங்களாகும் என்று அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *