UAE புறப்பட்டார் மாமன்னர்!
- Shan Siva
- 22 Dec, 2025
ஜொகூர் பாரு, டிச 22: மாட்சிமை
தங்கிய மலேசிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம், டிசம்பர் 24 வரை சிறப்புப் பயணமாக இன்று ஐக்கிய
அரபு எமிரேட்ஸ் புறப்பட்டார்.
இது,
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல்
நஹ்யானின் அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அவரது முதல் அதிகாரப்பூர்வ ஐக்கிய
அரபு எமிரேட்ஸ் பயணத்தைக் குறிக்கிறது.
சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரின்
முகநூல் பக்கத்தில் உள்ள ஒரு பதிவில், அரச
விமானம் காலை 9 மணிக்கு செனாய் சர்வதேச விமான
நிலையத்தில் உள்ள ராயல் ஹங்கரில் இருந்து புறப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



