R&R ல் மாமன்னர்! ஆச்சரியத்தில் பொதுமக்கள்
- Shan Siva
- 20 May, 2026
கோத்தா திங்கி,மே 20: ஜொகூர், கோத்தா திங்கி R&R ஓய்வு மற்றும் சேவை மையத்திற்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் இன்று உணவருந்த வந்த நிலையில், அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.
உணவருந்த வந்தவர்களுக்கு ஒரு சாதாரண காலைப் பொழுதாகத் தொடங்கிய நிகழ்வு, இன்று ஒரு மறக்க முடியாத சந்திப்பாக மாறியது.
மிட்வே ஆர்&ஆர் டுசுன் பாண்டி மையத்தில்
மாட்சிமை பொருந்திய மாமன்னர் லோன்டாங் என்ற எளிய காலை உணவையும் சுவைத்து உண்டார்.
அங்கு கூடியிருந்தவர்கள் மாட்சிமை பொருந்திய மன்னரை வாழ்த்தவும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் கிடைத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



