எதிர்க்கட்சி எம்பி-க்களுக்கான ஒதுக்கீடு விவகாரம்! PN சிறப்புக் கூட்டம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 20: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்த வரைவு குறித்து விவாதிக்க பெரிகாத்தான் நேஷனல் இந்த வாரம் கூடுகிறது.

பெரிக்காத்தானின் தலைமைக் கொறடாவாகிய தக்கியுதீன் ஹசான், இந்த வரைவு தனக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் முடிவை இறுதி செய்ய கூட்டம் நடைபெறும் என்றும் உறுதிபடுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில், துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, சமர்பிக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பெரிக்காத்தாப்  ஒப்புக் கொள்ள வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகளுக்கும், அரசுக்கும் இடையே சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *