பிரதமரின் Facebook பதிவை நீக்கிய விவகாரம்… மன்னிப்பு கேட்டது Meta நிறுவனம்!

top-news
FREE WEBSITE AD


பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 6: ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இடுகையிட்ட பதிவுகளை மெட்டா நிறுவனம் பேஸ்புக்கில் இருந்து மீட்டெடுத்துள்ளது.

இருப்பினும் இந்த இடுகையில் இப்போது "பொது விழிப்புணர்வுக்காக இடுகை அனுமதிக்கப்படுகிறது" என்று கூடுதல் குறிப்பு உள்ளது.

இந்தப் பிழைக்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மெட்டா செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸிடம் மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ளார்.

தகவல் தொடர்பு அமைச்சர் Fahmi Fadzil மற்றும் பிரதமர் அலுவலக உறுப்பினர்கள் நேற்று Meta பிரதிநிதிகளை சந்தித்து விளக்கம் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *