3ஆம் குழந்தைக்கு பவன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன் குடும்பம்!

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவில் ஸ்டாண்ட் அப் காமெடிகளாக இருந்து தற்போது அசுர வேகத்தில் வளர்ந்து பெரிய பெரிய கதாநாயகர்களுள் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சின்னத்திரையில் அறிமுகமாகி பின் தன் நகைச்சுவை பேச்சால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனதில் நீங்கா இடம் பிடித்து வெள்ளித்திரையில் வலம் வந்து இன்று பல முன்னணி கதாநாயகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார்

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியாகி திரைக்கு வந்தது. அடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகர்த்திகேயன் தனக்கு மூன்றாவது மகன் பிறந்திருக்கிறார் என சந்தோஷ செய்தியை வெளியிட்டு அதற்கு ரசிகர்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். தற்போது, தனது மூன்றாவது மகனுக்கு பவன்  என பெயர் வைக்கப்பட்டு பவன் சிவகார்த்திகேயன் என்ற முழுப்பெயரோடு, அழகான காணொளியுடன் எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஏற்கனவே ஆராதனா மற்றும் குகன் என்பது  சிவகார்த்திகேயனுடைய இரண்டு குழந்தைகளின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது..

3ஆம் குழந்தைக்கு பவன்  என்று பெயர் சூட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன் குடும்பம்!

The Sivakarthikeyan family is delighted to name their 3rd child Pawan!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *