பிஎஸ்ஜியை வீழ்த்தி கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்சி!
- Muthu Kumar
- 15 Jul, 2025
நியூ ஜெர்சி, ஜூலை 15-
மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு பிபா கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் செல்சி அணி, ஐரோப்பிய சாம்பியனான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, முதல் முறையாக விரிவாக்கப்பட்ட 32 அணிகள் கொண்ட இந்தப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த வெற்றியை செல்சியின் நட்சத்திர வீரர் கோல் பால்மர், புதிய கையெழுத்தான வீரர் ஜோவோ பெட்ரோ ஆகியோரின் மகத்தான ஆட்டத்தால் அடைந்தது.முதல் பாதியில் பால்மர் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். 22ஆவது நிமிடத்தில் மாலோ கஸ்டோவின் ஓட்டத்தைத் தொடர்ந்து, பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் ஜியான்லூய்கி டோனரும்மாவை தாண்டி முதல் கோலை அடித்தார். எட்டு நிமிடங்களுக்குப் பிறகு. மற்றோர் அற்புதமான தனிப்பட்ட முயற்சியில் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.
முதல் பாதி முடிவதற்கு முன், பால்மரின் உதவியால் ஜோவோ பெட்ரோ, டோனரும்மாவை மீறி மூன்றாவது கோலை அடித்து, செல்சியை 3-0 என முன்னிலை பெறச் செய்தார். செல்சியின் கோல்காவலர் ராபர்ட் சான்செஸ், பிஎஸ்ஜியின் தாக்குதல்களை முறியடித்து. குறிப்பாக க்வார்ட்ஸ்கேலியா, டெம்பலேயின் முயற்சிகளைத் தடுத்து அணி வெற்றி பெற உதவினார்.
பிஎஸ்ஜி. இந்தப் போட்டியில் தோல்வியடைந்த போதிலும், அவர்களின் மத்திய திடல் ஆட்டக்காரர்களான பேபியன் ரூயிஸ், விடின்ஹா, ஜோவோ நெவ்ஸ் ஆகியோரின் ஆட்டம் குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளர் என்ஸோ மரேஸ்காவின் திட்டமிடல். அணியின் ஒருங்கிணைந்த செயல்பாடு இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த வெற்றி, செல்சியின் உலகளாவிய மேலாண்மையை உறுதிப்படுத்தியதுடன், 2021-இல் அவர்கள் வென்ற முதல் கிளப் உலகக் கோப்பையைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இந்தப் பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து அணியாகவும் ஆனது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



