ரப்பர் தொழிற்சாலையில் ரசாயனக் கசிவு! - 16 பேர் பாதிப்பு

- Shan Siva
- 28 Jun, 2024
சுங்கைப் பட்டாணி:
ரப்பர் கையுறை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று ரசாயனக் கசிவு ஏற்பட்டதைத்
தொடர்ந்து 16 பேர் கண்
எரிச்சல் மற்றும் குமட்டல் காரணமாக மயங்கி விழுந்தனர்.
பிற்பகல் 3.04 மணிக்கு சோடியம் ஹைபோகுளோரைட் கசிவு குறித்து
தொழிற்சாலையில் இருந்து துறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டதாக கெடா தீயணைப்பு
மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் ஒருவர் மயக்கமடைந்ததாகவும், 16 பேர் கண் எரிச்சல் மற்றும் குமட்டலை அனுபவித்ததாகவும்
கூறப்படுகிறது.
ரசாயனக் கசிவால்
பாதிக்கப்பட்டவர்களில் 15 பெண்கள் மற்றும்
இரண்டு ஆண்கள் உள்ளனர். அவர்கள் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் என்று
நம்பப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *