அதிகம் மக்களைக் கவரும் புத்தக கண்காட்சி!

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூன் 3- உலக வாணிக மையத்தில்  நடைபெறும் 2024 கோலாலம்பூர் அனைத்துலக புத்தக விழாவில் இடம் பெற்றுள்ள பெவிலியன் சிலாங்கூர் காட்சிக்கூடத்திற்கு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை புரிந்தனர்.

அதிகமான வருகையாளர்களை ஈர்ப்பதற்காக மாநில அரசு நிறுவனங்களின் கண்காட்சி,  விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு இந்த கண்காட்சிக் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஒருங்கிணைப்பாளர் ஜப்ருல்லா அரிஸ் கூறினார்.

கடந்தாண்டைப் போலவே இம்முறையும் இலக்கியவாதிகளுடன்ன கலந்துரையாடல் நிகழ்வுகளை தினமும் இங்கு ஏற்பாடு செய்வதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களின் அனுபவங்கள் மற்றும் வெற்றியின் இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குரிய தளமாக இது விளங்குகிறது என்றார் அவர்.

தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை செயல்படும் இந்த கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு இலக்கியவாதிகள் பங்கேற்கும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *