மலையேறச் சென்ற மலை வழிகாட்டி மரணம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: ஹுலு லங்காட்டில் உள்ள குனோங் ஹித்தாம் என்ற சிகரத்தை இன்று காலை அடைந்த போது மலை வழிகாட்டி ஒருவர் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

57 வயதான வழிகாட்டி நோர்பஸ்லி அப்த் அஜீஸ், இன்று மாலை 5.50 மணிக்கு இறந்துவிட்டதாக, அந்த இடத்தில் மருத்துவக் குழுவினர் உறுதிசெய்தனர்.

காலை 11.48 மணிக்கு தகவல் கிடைத்ததும் மீட்புக் குழு விரைந்தது. மாலை 4.30 மணியளவில் மலை உச்சியை அடைய குழுவுக்கு நான்கு மணி நேரம் எடுத்தது.

அந்த நேரத்தில் நோர்ஃபாஸ்லி சுயநினைவின்றி இருந்ததாகவும்,  சுவாசம் இருந்ததாகவும்  அக்குழு தெரிவித்தது. இருப்பினும், மாலை 5.50 மணியளவில் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *