மாமன்னர் முடி சூட்டு விழா! சிலாங்கூர் சுல்தானை சந்தித்தார் ஃபாமி ஃபாட்ஸில்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூன் 28 – மேன்மை தங்கிய  சிலாங்கூர் சுல்தான்  ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் இஸ்தானா கயாங்கானில் சந்தித்தார்.

இஸ்தானா நெகாராவில், வரும் ஜூலை 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் மாட்சிமை தாங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமின் முடிசூட்டு விழாவிற்கான  அரச அழைப்பினை வழங்குவதற்காக சிலாங்கூர் சுல்தானை ஃபாஹ்மி சந்தித்தார்.

மாமன்னரின் அரியணை அமரும் விழாவுக்கான சிறப்பு ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஃபாஹ்மி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவின் 17வது மாமன்னராக சுல்தான் இப்ராஹிம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி  பதவியேற்றார். இதனை அடுத்து மாமன்னருக்கான முடி சூட்டு விழா ஜூலை 20ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவை முன்னிட்டு  பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *