புதிய தலைமைச் செயலாளர் தனது பணியைத் தொடங்கினார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12: நாட்டின் பொதுத்துறையை நிர்வகிப்பதில்  திறன்மிக்க நல்ல நிர்வாகமாக தனது செயல்பாடுகள் அமையும் என்று புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை வலுப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முயற்சிகளுக்கு ஏற்ப எங்களின் தொலைநோக்குப் பார்வை அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் வலியுறுத்தியது போல், நல்லாட்சி முக்கியமானது. மேலும் இது பொது நிர்வாகத்தை நிர்வகிப்பதில் தனது முக்கிய நோகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொதுச் சேவையில் 30 வருட அனுபவத்துடன், 55 வயதான ஷம்சுல் அஸ்ரி, நிதி அமைச்சு, JPA மற்றும் மாநில அரசு நிர்வாகத்தில் பணியாற்றியுள்ளார்.

அமெரிக்கா, ஓக்லஹோமாவில் உள்ள துல்சா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார், மேலும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பிய வணிக நிர்வாக நிறுவனம் (INSEAD) உட்பட பல சர்வதேச நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *