15.6 கோடி அமெரிக்க டாலைரை மலேசியாவிடம் திருப்பிக் கொடுத்த அமெரிக்கா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 14: 1 எம்டிபி நிறுவனத்தின் சொத்து பறிமுதல் நடவடிக்கையின் வழி மீட்கபட்ட நிதியின் நான்காவது தவணைப் பணமான சுமார் 15.6 கோடி அமெரிக்க டாலரை  அமெரிக்க அரசாங்கம் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பியுள்ளது.

கடந்த செவ்வாயன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்த மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி. ககன்,  மலேசிய அரசாங்கம் சமர்ப்பித்த பணத்தைத் திரும்பப் பெறும் மனுவுக்கு அமெரிக்க நீதித்துறை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அந்த  நிதி திருப்பி அனுப்பப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்த பரிமாற்றத்தின் மூலம் மலேசியாவிலிருந்து துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிதியில் சுமார் 140 கோடி அமெரிக்க டாலரை (660 கோடி வெள்ளி )  மீட்டெடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்கும் அமெரிக்கா உதவியுள்ளது.

நீதித்துறை விசாரணையின் வாயிலாக  நான்காவது தவணையாக இந்த சொத்துக்கள்  மீண்டும் மலேசியாவிற்கு மாற்றப்படுவதில்  மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று ககன் கூறினார்.

இந்த அசாதாரணத் தொகை மலேசியா மக்களுக்குச் சொந்தமான இடத்துக்கு மீண்டும் செல்கிறது.  உண்மையான நோக்கத்திற்காக –  மலேசியர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அந்த நிதியைப் பயன்படுத்த முடியும் என்று ககன் கூறினார்!


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *