சென்னை மாநகர கமிஷனருக்கு கால அவகாசம் கொடுத்து கூலிப்படையை ஒழிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்!

top-news
FREE WEBSITE AD

கஞ்சா, மது மற்றும் போதைப் பொருட்கள் தான், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணம். அதை கட்டுப்படுத்தினால், சட்டம் - ஒழுங்கு  கட்டுப்படுத்தப்படும். அரசுக்கு அது பற்றி கவலை இருப்பதாக தெரியவில்லை.

தற்பொழுது சென்னை மாநகர கமிஷனராக அருணை நியமித்திருக்கின்றனர். அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். கூலிப்படை கலாசாரத்தை வேருடன் அறுக்க வேண்டும். கூலிப்படைகளை கட்டுப்படுத்தினாலே மற்றவைகள் அடங்கி விடும்.

திருமாவளவன்  கள்ளச்சாராய இறப்புகளுக்கு சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கேட்டிருக்கிறார். நாங்களும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சி.பி.ஐ., விசாரணை கேட்டிருக்கிறோம்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளில் காவல் துறை பங்களிப்பு  பெரிய அரசியல் புள்ளிகள் பங்களிப்பு இருப்பதால், சி.பி.ஐ., விசாரணை கேட்கிறோம்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *