ஒரு கதவு மூடினால், இன்னும் பத்து கதவுகள் திறக்கும்! - சையத் சாதிக் அப்துல் ரஹ்மான்

top-news
FREE WEBSITE AD

மூவார், ஜூலை 22: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான், 500 நாட்களுக்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு இறுதியாக RM200,000 ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், ஒதுக்கீடு கடுமையான நிபந்தனைகளுடன் வந்ததாகவும், அலுவலக வாடகை, ஊழியர்களின் சம்பளம், உபகரணங்கள் மற்றும் அலுவலக மேலாண்மை போன்ற நிர்வாக நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

இந்த ஒதுக்கீட்டை எந்தவொரு நலத்திட்ட உதவிகளுக்கும், உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கும் அல்லது மக்களுக்கு எந்த வகையான பங்களிப்பிற்கும் பயன்படுத்த முடியாது.

இது முழுமையாக தணிக்கை செய்யப்படும் என்று அவர் நேற்று ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

ஒரு தவணைக்கு RM20 மில்லியன் வரை பெறும் அரசாங்க எம்.பி.க்கள் பெற்ற ஒதுக்கீட்டை தங்களுக்கு வழங்கப்பட்ட 2 லட்சம் ரிங்கிட்டுடன் சையத் சாதிக் ஒப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ ஒதுக்கீட்டு கட்டுப்பாடுகளை எதிர்கொண்ட போதிலும்,  தொடர்ந்து கடினமாக உழைத்து நிதி திரட்ட புதிய முயற்சிகள் மேற்கொண்டு மக்களுக்காக உழைப்பேன் என்று அவர் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும், பல்வேறு புதிய முயற்சிகள் மூலம், தனது சொந்த முயற்சிகள் மூலம் மூவார் மக்களின் நலனுக்காக 20 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான பங்களிப்பை தம்மால் வழங்க முடிந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தாம் இந்த முயற்சிகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கப்போவதாகத் தெரிவித்த அவர்,  ஒரு கதவு மூடினால், இன்னும் பத்து கதவுகள் திறக்கின்றன என்று பதிவிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *