கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 21: இன்று காலை கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், பினாங்கில் குறைந்துள்ளது.  மேலும் பெர்லிஸ், சிலாங்கூர் மற்றும் பேராக்கிலும் இதே நிலைதான் நீடித்தது.

கெடாவில், நேற்று இரவு 8 மணிக்கு 6,760 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 7,494 ஆக உயர்ந்துள்ளது.

2,445 குடும்பங்களில் இருந்து ஆறு மாவட்டங்களில் உள்ள 42 தற்காலிக நிவாரண மையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனதாக மாநில சமூக நலத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 3,292 பேர் கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கெடாவில் உள்ள ஐந்து ஆறுகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை தெரிவித்துள்ளது.

பினாங்கில், நேற்றிரவு 427 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 259 ஆகக் குறைந்துள்ளது.

சிலாங்கூரில், 36 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேர் இன்னும் கோலா சிலாங்கூரில் உள்ள தஞ்சோங் கராங் விவசாயிகள் மேலாண்மை நிறுவனத்தில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெர்லிஸில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. 90 பேர் கங்கார் மற்றும் அராவ் ஆகிய இடங்களில் உள்ள மூன்று நிவாரண மையங்களிலும், பேராக்கில் பாதிக்கப்பட்ட 16 பேர் பாகான் செராய்யில் உள்ள எஸ்.கே.சங்காட் லோபாக்கில் உள்ள நிவாரண மையத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *