நாங்கள் பேசும்போது சந்திரன், நட்சத்திரம் என அள்ளி வீசுவதில்லை! - நூருல் இஸா

top-news
FREE WEBSITE AD

செப்பாங்கார், நவ 18: சபா பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கட்சிகளும் தங்கள் பதிவுகளையும் சாதனைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், இதனால் வாக்காளர்கள் தங்கள் தேர்தல் செயல்திறனை மதிப்பிட முடியும் என்றும் பிகேஆர் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் வலியுறுத்தியுள்ளார். போட்டியிடும் கட்சிகள் சபாவை ஆட்சி செய்த காலத்தில் அடைந்த குறைந்தது மூன்று சாதனைகளையாவது பட்டியலிட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்..

பக்காத்தான் ஹரப்பான், குறிப்பாக பிகேஆர், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் சபா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வலுவான உந்துதலைக் கொண்டிருந்தது என்று நூருல் இஸ்ஸா கூறினார்.

 சபாவில் பல கட்சிகள் இதற்கு முன்பு ஆட்சி செய்துள்ளன. அவர்கள் அரசாங்கத்தில் இருந்த காலத்தில் என்ன சாதித்தார்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான் தங்கள் கேள்வி என அவர் கூறினார்.

நாங்கள் பேசும்போது, ​​சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் மண்டலத்தை வழங்கப் போகிறோம் என்று அள்ளி வீசுவதில்லை, மாறாக உறுதியான சாதனைகளில் கவனம் செலுத்துகிறோம்  என்று அவர் இன்று இனானாம், கம்போங் தம்பாயில் நடந்த ஜியாரா காசிஹ் நிகழ்ச்சிக்குப் பிறகு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *