முகைதீன் பின்னால் கட்சி நிற்கும்! - ஹம்சா ஜைனுடின்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11: ஜன விபாவா திட்டத்துடன் தொடர்புடைய அதிகார துஷ்பிரயோக வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, பெர்சாத்து அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசினுக்கு ஆதரவாக உறுதியாக நிற்பதாக, அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்

இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கும் அதே வேளையில், கட்சியின் போராட்டத்திற்கு தடையாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். 

ஆனால் அநீதிக்கு எதிராகப் போராடுவதற்கான ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் கட்சி வலுப்படுத்தும் என்று கூறினார்.

எங்கள் போராட்டம் இந்த அரசியல் வழக்குகளால் ஒருபோதும் நிறுத்தப்படாது; மாறாக, இது எங்கள் ஒற்றுமையை மேலும் பலப்படுத்துகிறது மற்றும் அனைத்து வகையான அநீதிகளுக்கும் எதிராக போராடுவதற்கான உறுதியையும் அளிக்கிறது என்று கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *