ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்! இரு நாள்களுக்குப் பின் சடலமாக மீட்பு!

top-news
FREE WEBSITE AD


கினாபத்தாங்கான் உலு செகாமா ஆற்றில் 51 வயதுடைய நபர் ஒருவரின் படகு பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரது சடலத்தை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

51 வயதான நபர் நேற்று இரவு 11 மணியளவில் AAP தோட்ட பண்ணையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டார்.

செவ்வாயன்று ஆற்றில் இரும்பு கேபிள்களை நிறுவ பணிக்கப்பட்ட மூன்று ஸ்டீல் கேபிள் நிறுவுபவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 7.30 மணியளவில் ஒரு குழு பாதிக்கப்பட்டவரை மீட்க உதவுவதற்காக இடத்திற்குச் சென்றதாகவும், பின்னர் அவரது உடலை மேலதிக நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *