போன் பேசிக்கொண்டிருந்தவரின் கைப்பேசியை மோட்டார் சைக்கிளில் வந்தவன் பறித்துச் சென்றான்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: கோலாலம்பூர் பசார் செனி அருகே  ஒருவரின் கைபேசியை மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் பறித்துச் சென்றான். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், பாதசாரி சாலையோரத் தடுப்புச் சுவரில் கைகளை ஊன்றிக் கொண்டே போனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபர் பாதசாரி அருகில் சென்று தொலைபேசியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

தங்கள் தொலைபேசியில் கவனம் செலுத்தும் மற்றும் அவர்களின் சுற்றுப்புறங்களைப் பற்றி அறியாத பலரின் பழக்கத்தை பிரதிபலிக்க இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *