தனியார் துறையும் ஊதிய உயர்வு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஸ்டீவன் சிம்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆகஸ்ட் 16: ஊதியத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை தனியார் துறையும் பின்பற்ற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஊதியத்தை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இது தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் நிறுவனத்திற்கான பங்களிப்புகளைப் பாராட்டுவதற்கான வழிமுறையாக அமையும் என்று அவர் கூறினார்.

புதிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளை மனிதவள அமைச்சு பெற்றுள்ளதாகவும், அமைச்சரவையில் அதனை முன்வைக்கத் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *