எங்கே விஜயலட்சுமி? 6 வது நாளாகத் தொடரும் சோகம்!

top-news
FREE WEBSITE AD

(இரா. கோபி)  கோலாலம்பூர், ஆக. 28- கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நில அமிழ்வில் மாயமான இந்தியாவைச்  சேர்ந்த விஜயலட்சுமியை 6 ஆவது நாளாக தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,  காலை 10.30 மணியளவில் டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஏசிபி ஷுலிஸ்மி அபெண்டி விஜயலட்சுமி புதையுண்ட இடத்தைப் பார்வையிட்டார்.   

அதன் பிறகு பாதுகாப்புக்காக போலீஸ் அதிகாரிகளும் சாலைகளில் நிறுத்தப்பட்டனர்.  நண்பகல் 12.30 மணியளவில் விஜயலட்சுமியைத் தேடுவதற்கு நவீன இயந்திரங்களை கொண்டு சம்பவ இடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

நண்பகல் 1.00 மணியளவில் அங்கு விரைந்த போலீஸ் படைத் தலைவர்  டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் நிலைமையைப் பார்வையிட்டு,  விஜயலட்சுமியின் குடும்பத்தாரைச் சந்தித்து ஆறுதலைத் தெரிவித்தார். 

விஜயலட்சுமியின் கணவரும் மகனும் சோகமே உருவாக,   கண்ணீருடன் போலீஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்தனர்.  அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தருவதாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஏசிபி ஷுலிஸ்மி அபெண்டி தெரிவித்தார். 

இதற்கிடையில்  திடீரென்று 1.30 மணியளவில் இந்து தர்ம மாமன்ற இயக்கத்திலிருந்து 5 பேர் கொண்ட குழு ஒன்று விஜயலட்சுமி புதையுண்ட இடத்திலிருந்து 15 மீட்டர் தூரத்தில் பிரார்த்தனை செய்தனர்.  விஜயலட்சுமி புதையுண்ட இடத்தில் இருந்து 15 மீட்டர் தூரத்திற்கு கடைகள் மூடப்பட்டுள்ளன. 

ஊரில் தன் மகளும், உறவினர்களும் வேதனையுடன் காத்திருப்பதாக விஜயலசுமியின் கணவர் கண்ணீர் மல்கக் கூறினார்.  சில நேரங்களில் தனது மனைவி புதையுண்ட குழியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கிறார். அவருக்கு ஆதரவாக போலீஸ் அதிகாரிகளும் உடன் இருந்து வருகின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *