பாலஸ்தீனியர்களை மீண்டும் அழைத்து வரும் எண்ணம் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22: மலேசியாவிற்கு அதிகமான பாலஸ்தீனியர்களை அழைத்து வரும் இரண்டாவது பணி எதுவும் இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் கூறினார்.

 70,000 பாலஸ்தீனியர்கள் எகிப்தில் நுழைந்து தங்க முடியும், ஆனால், அந்த நாடு அவர்கள் அனைவரையும் ஆதரிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, எங்களால் முடிந்தவரை நாங்கள் உதவுகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், மருத்துவ உதவிகளை வழங்கவும், பின்னர் அனைத்து பாலஸ்தீனியர்களையும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பவும் அமைச்சு உதவும் என்று கூறினார்.

பாலஸ்தீனிய தலைவர்களுடன் தாம் கலந்துரையாடியதாக குறிப்பிட்ட அவர்,  அவர்கள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும்,  அவர்கள் தங்கள் நாட்டில் இறக்கத் தயாராக உள்ளனர் என்றும் கூறினார்.  அவர்கள் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்ப விரும்புகிறார்கள், அவர்கள் வெளியேற்றப்பட விரும்பவில்லை என்று தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *