பொதுமக்கள் பீதியைடைத் தேவையில்லை! – மலேசிய விமானப்படை
- Shan Siva
- 17 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 17: மலேசிய அரச விமானப்படையான RMAF திங்கட்கிழமை முதல் ஒரு பயிற்சியை நடத்தவிருப்பதால், சபாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் தாழ்வாகப் பறக்கும் விமானங்களையோ அல்லது பாதுகாப்பு மற்றும் காவல் துறையினரின் இருப்பையோ கண்டால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 29 ஆம் தேதி வரை
நடத்தப்படவுள்ள 'கெலாவார்'
பயிற்சியில், 'ஆபரேஷன் பாசிர் தெலத்தான்' பகுதியின் கீழ் வரும் தாவாவ், செம்போர்னா மற்றும் லஹாட் டத்து ஆகிய இடங்களை உள்ளடக்கிய
பிரத்யேகப் பயிற்சிப் பகுதிகளில் தந்திரோபாய தாழ்வான உயரப் பறத்தல்கள் மற்றும்
கடல்சார் சொத்துக்களின் நகர்வுகள் இடம்பெறும் என மலேசிய அரச விமானப்படை
தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட
பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்தப்
பயிற்சியின் போது இராணுவ விமானங்கள் மற்றும் பாதுகாப்புச் சாதனங்களின் அதிகரித்த
இருப்பைக் கண்டு பீதியடையாமல், அமைதியாக
இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப்
பயிற்சியில், RMAF சிறப்புப் படைகள்,
மலேசிய அரச கடற்படை சிறப்புப் படைகள் மற்றும்
இராணுவத்தின் சிறப்புச் சேவைக் குழு ஆகிய முப்படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளின்
ஒத்துழைப்பும் இடம்பெறும்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



