PN-ல் புதிய கட்சிகளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! – தக்கியுதீன்
- Shan Siva
- 17 Feb, 2026
கோத்தா பாரு, பிப் 17: பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, அதில் பெர்சாத்து முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தலைமையில் புதிய கட்சி அமைந்தாலும் அதுவும் அடங்கும். நான்கு கட்சிகள் கொண்ட கூட்டணியில் புதிய கட்சிகளை கூட்டணி வரவேற்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைமைக் கொறடா டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹசான் கூறினார்.
ஹம்சா ஒரு புதிய
கட்சியை உருவாக்கத் தேர்வுசெய்தால், அது அவரது முடிவு. பெரிக்காத்தான் நேஷனல் அதற்குத் திறந்திருக்கும் என்று அவர்
இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சீனப் புத்தாண்டு
கொண்டாட்டத்தின் போது கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினருமான தக்கியுதீன் இந்தக்
கருத்துக்களைத் தெரிவித்தார்.
பெரிக்காத்தான்
எந்த புதிய கட்சியையும் முழு அங்கமாகவோ அல்லது துணைக் கட்சியாகவோ ஏற்றுக் கொள்ளும்
என்று தக்கியுதீன் கூறினார்.
78 வயதான ஹம்சா,
அம்னோவில் பல தசாப்த கால அனுபவமுள்ள ஒரு மூத்த
அரசியல்வாதி மற்றும் முன்னாள் அமைச்சர்.
பெர்சாத்துவில்
தலைமைத்துவ மோதல் காரணமாக பிப்ரவரி 13 அன்று அவர் பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கிடையில்,
சனிக்கிழமை ஹம்சா, மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதை
நிராகரிக்கவில்லை, ஆனால் எந்தவொரு
முடிவும் கூட்டாக எடுக்கப்படும் என்று கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



