பிரிட்டனை ஆள உங்கள் இரண்டு பேரை விட்டால் வேறு ஆளே இல்லையா!

top-news
FREE WEBSITE AD


பிரிட்டனில் வியாழக்கிழமை அதாவது ஜூலை மாதம் 4ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள், லேபர் கட்சிக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என கணித்துள்ளன.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கிடையிலான விவாத நிகழ்ச்சி ஒன்றின்போது, கன்சர்வேட்டிவ் கட்சியின் ரிஷி சுனக்கும், லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்கள்.

ரிஷியை  எப்படி ஸ்டார்மர் கட்டுப்படுத்தப்போகிறார் என கேள்வி எழுப்ப, ஸ்டார்மரோ ரிஷி ஒரு பணக்காரர், ஏழைகளின் கஷ்டம் அவருக்கு புரியாது என பர்சனலாக ரிஷியைத் தாக்கினார்.

ரிஷி லேபர் கட்சியிடம் சரணடைந்துவிடவேண்டாம் என கேட்க, ஸ்டார்மரோ 14 ஆண்டுகள் ஆண்ட கன்சர்வேட்டிவ் கட்சியிடமிருந்து நாட்டுக்கு ஒரு மாற்றம் தேவை, மாற்றத்துக்கு எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்றார்.

இப்படி மாறி மாறி இருவரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருக்க, விவாத நிகழ்ச்சியில் பார்வையாளராக பங்கேற்ற ஒருவருக்கு எரிச்சல் கட்டுமீறிப்போய்விட்டது.

பிரிட்டனை ஆள்வதற்கு உங்கள் இரண்டு பேரை விட்டால் வேறு ஆளே இல்லையா என் அவர் கேள்வி எழுப்ப, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *