உடலை திருப்பக் கூட இடமில்லை.... உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் குதித்தோம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: கோலாலம்பூர் ஜலான் மஸ்ஜித் இந்தியாவில் நில அமிழ்வில் மூழ்கிய இந்திய மாதுவைத் தேடும் பணியில், ஒன்பது நாள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் பங்கேற்ற தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள், தங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சு வாயுக்கள் நிறைந்த சாக்கடையில் ஒரு குறுகிய இடத்தில் குதிக்க வேண்டியிருந்தாக
அந்நடவடிக்கையை மேற்பார்வையிட்ட மூத்த தீயணைப்பு அதிகாரி  முகமட் நஸ்ரி அபிடின் தெரிவித்துள்ளார்.

தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையில் ஈடுபட்ட 29 டைவர்களும் உயிருக்கு ஆபத்தான பணிகளில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

ஒன்பது நாட்களில் மீட்பு நடவடிக்கைக்கு திட்டமிடவும் வியூகங்களை வகுக்கவும் ஒவ்வொரு தீயணைப்பு வீரரின் மன மற்றும் உடல் சகிப்புத்தன்மையை இந்த நடவடிக்கை சோதித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு டைவரும் மற்றொரு டைவராக் மாற்றப்படுவதற்கு முன்பு, சுமார் 30 நிமிடங்கள் டைவ் செய்ய வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்

சவால் என்னவென்றால், டைவர்ஸ் சுமார் 1.5 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு குறுகிய மேன்ஹோலில் நுழைய வேண்டியிருந்தது, அது கற்கள் மற்றும் கடினமான குப்பைகளால் நிரப்பப்பட்டதால் இன்னும் சிறியதாக மாறியது என்று அவர் குறிப்பிடார்.

டைவர்ஸ் மேன்ஹோலில் படுத்துக் கொண்டு செயல்பட வேண்டியிருந்தது, தங்கள் உடலைத் திருப்புவதற்கு இடமில்லாமல் என்று  உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *