படகு கவிழ்ந்து காணாமல் போனவரைத் தேடும் பணி தொடர்கிறது!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 24: மோசமான வானிலை காரணமாக கிள்ளான் புலாவ் இண்டாவில் படகு கவிழ்ந்ததில்  காணாமல் போன மீனவர் இன்னும் மீட்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8 மணிக்கு, பண்டாய் அச்சே, புலாவ் இன்டாவிலிருந்து 1.8 கடல் மைல்தொலைவில் இந்தச் சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் (எம்எம்இஏ) தெரிவித்துள்ளது.

படகு கவிழ்ந்தபோது, ​​இரு மீனவர்களும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 43 வயதான ஆர்மிசாம் இப்ராஹிம் காப்பாற்றப்பட்டார்.  மேலும் துறைமுகத்தில் இருந்து ஒரு படகு பைலட்டால் கண்டுபிடிக்கப்பட்டார், அதே நேரத்தில் அவரது உறவினர் முகமட் ஃபாசில் பாஜியன் எனும் 36 வயது நபரை  இன்னும் காணவில்லை.

அறிக்கை கிடைத்தவுடன், MMEA நேற்று மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளை செயல்படுத்தியது.

மோசமான வானிலை காரணமாக தேடல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டதாக சிலாங்கூர் MMEA இயக்குனர் கேப்டன் அப்துல் முஹைமின் முஹம்மது சலே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *